Thursday, June 13, 2024
Home » என்எல்சியால் நிலம் கையகபடுத்தபட்ட 1088 விவசாயிகளுக்கு இன்று முதல் இடப்பெயர்வு கருணைத்தொகை வழங்கும் முகாம்

என்எல்சியால் நிலம் கையகபடுத்தபட்ட 1088 விவசாயிகளுக்கு இன்று முதல் இடப்பெயர்வு கருணைத்தொகை வழங்கும் முகாம்

by MuthuKumar
Published: Last Updated on

கடலூர்: என்எல்சியால் நிலம் கையகபடுத்தபட்ட 1088 விவசாயிகளுக்கு இன்று முதல் இடப்பெயர்வு கருணைத்தொகை இன்று முதல் வழங்கபடுகிறது. என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகாக கையகப்படுத்தபடும் நிலத்திற்காக வழங்கபடும் இழப்பீட்டு தொகையை அதிகபடுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து பல்வேறு விதமாக போராட்டம் நடத்திவருகின்றனர். நில எடுப்பு சட்டத்தின் மூலமாக கையகப்படுத்தபட்ட நிலங்களுக்கு ஏற்கனவே இழப்பீடு கொடுக்கபட்டுவிட்டது. இந்த நிலையில் 1088 விவசாயிகளுக்கு இடப்பெயர்வு கருணைத்தொகை அறிவிக்கபட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் எடுத்த முயற்சியின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. குறிபாக வளையமாதேவி, மேல்பாதி, கீழ்பாதி, தென்குத்து, கற்றாலை, மும்முடி சோழன் உள்ளிட்ட 6 கிராமத்தை சேர்ந்த 1088 விவசாயிகளுக்கு இந்த இடப்பெயர்வு கருணை தொகை வழங்கபடுகிறது. இந்த முகாம் ஆனது இன்று தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் விடுபட்டவர்களுக்கு அடுத்த சில நாட்களில் எப்போது வேண்டுமானாலும் நேரில் வந்து, சம்பந்தபட்ட ஆவணங்களை சமர்பித்து, இடப்பெயர்வு கருணை தொகை பெற்றுகொள்ளாம் என தெரிவிக்கபட்டுள்ளது. இந்த முகாம் முடிந்தாலும் கூட சம்பந்தபட்ட விவசாயிகள் ஆவணங்களை கொடுத்து இடப்பெயர்வு கருணை தொகையை பெற்றுகொள்ளாம் என கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 + 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi