நெய்வேலி: நெய்வேலி என்எல்சி 2ஆவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்வேயர் பெல்டில் ஏற்பட்ட தீ விபத்தால் இயந்திரம் எரிந்து வருவதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி இல்லாததால் கன்வேயர் பெல்ட் ரோலர் தீப்பிடித்து எரிவதால் பலகோடிரூபாய் சேதமடைந்துள்ளது.