Friday, May 17, 2024
Home » புதுவையில் பரபரப்பு ஆசிரியர் பயிற்சி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

புதுவையில் பரபரப்பு ஆசிரியர் பயிற்சி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

by Lakshmipathi

*கல்லூரியை உறவினர்கள் முற்றுகை

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆசிரியர் பயிற்சி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தனியார் கல்லூரியை மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி சொக்கநாதன் பேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (51). கூட்டுறவு வங்கியில் உதவியாளராக உள்ளார். இவரது மனைவி தேவி. வீட்டின் கீழே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு கிருஷ்ணசூர்யா (18) மற்றும் ஹரிணியதேவி என 2 மகள்கள் உள்ளனர். மூத்தமகள் கிருஷ்ணசூர்யா, தனியார் கல்லூரியில் பி.ஏ. பி.எட் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தனக்கு கல்லூரி செல்ல விருப்பம் இல்லை, தொடர்ந்து எனக்கு எழுத்து வேலை கொடுக்கப்படுகிறது, என்னால் எழுத முடியவில்லை. வேறு கோர்சில் சேர்த்துவிடும்படி வீட்டில் கூறி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் கல்லூரியில் கொடுக்கப்பட்ட வேலைகளை கிருஷ்ணசூர்யா செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் கீழே அவர் இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மேலே சென்று அறையின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ண சூர்யா அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனே ரமேஷ் அவரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கிருஷ்ணசூர்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று மாணவியின் உடலை வாங்க மறுத்து ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியை திடீரென முற்றுகையிட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ரெட்டியார்பாளையம் எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார், மாணவியின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது பகுதியான கோரிமேடு காவல் நிலையத்தில் முறையிட்டால் உாிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவுறுத்தினர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே தற்கொலை செய்த மாணவியின் உடல் கதிர்காமத்தில் நேற்று மாலை பிரேத பரிசோதனை முடித்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

You may also like

Leave a Comment

18 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi