சென்னை: சேலத்தில் ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்கமளிக்கட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு:
‘‘இன்று சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டில் திமுக எம்.பி கனிமொழி ஏற்றி வைத்துள்ள நம் கழகக் கொடியும், மாநாட்டு அரங்கில் அதிரும் கொள்கை முழக்கங்களும் நாளைய வெற்றிக்கு நமக்கு ஊக்கமளிக்கட்டும்! புது வரலாறு படைக்கப் புறப்படுவோம்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.