சென்னை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையதாக மேலும் ஒருவர் மதுரையில் கைது செய்யப்பட்டார். நியோ மேக்ஸ் நிறுவன அதிகாரிகள் 3 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் சகாயராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார். முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாக கூறி நியோமேக்ஸ் நிறுவனம் பலகோடி ரூபாய் மோசடி என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.