Saturday, July 27, 2024
Home » மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.76.58 கோடி சொத்துக்களை முடக்க போலீஸ் நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் தகவல்

மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.76.58 கோடி சொத்துக்களை முடக்க போலீஸ் நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் தகவல்

by Dhanush Kumar

மதுரை: நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.76.58கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை எஸ்.எஸ். காலனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் என்ற நிறுவனம் போலி வாக்குறுதிகளை அளித்து பல நூறுகோடிகளை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் கமலக்கண்ணன், கபில், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கைதுசெய்யப்பட்ட கமலக்கண்ணன், கபில் உள்ளிட்ட சிலர் ஜாமீன் பெற்றனர்.

இந்நிலையில், நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, விருதுநகர் மாவட்டம் இ.சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவரும், கபில் என்பவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி ராஜ்குமார் என்பவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எவ்வளவு மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன? இவற்றில் எவ்வளவு மதிப்புள்ள ெசாத்துக்களை முடக்க திட்டம் உள்ளது என்பது குறித்து போலீசார் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி எம்.தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பா.நம்பிசெல்வன் ஆஜராகி, ‘‘நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், 19 இடங்களில் ரூ.76 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரத்து 577 மதிப்பிலான ெசாத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை 2 மாதத்திற்குள் சட்டத்திற்கு உட்பட்டு முடக்கி, அரசிதழில் வௌியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, போலீசார் குறிப்பிட்ட காலத்திற்குள் அடையாளம் காணப்பட்ட சொத்துக்களை முடக்க வேண்டும். இல்லாவிட்டால் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டி வரும் எனக் கூறி விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi