நெல்லை : நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டி அருகே பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து 5ம் வகுப்பு மாணவர் பலியானார். ஒரே ஆட்டோவில் 12 மாணவர்களை ஏற்றிச் சென்றதால் பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்தது. 5ஆம் வகுப்பு மாணவர் பிரதீஸ் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.