நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடலில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து 6-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 10,000 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.