நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. பெருங்கால் பாசனம் மூலம் பயன்பெறும் 2,756 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பைப் பொறுத்து 120 நாட்களுக்கு ஏற்றவாறு ஆட்சியர் கார்த்திகேயன் நீரை திறந்து வைத்தார்.