அன்னூர்: கோவையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில், நடைபெற்ற தாக்குதலுக்கு அங்கிருந்த காவலர்களின் அலட்சிய போக்கே காரணம். சபாநாயகர் உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். ஒன்றியத்தில் பாஜவுடனும், தமிழகத்தில் அதிமுகவுடனும் நட்புடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம். தை மாதம் பிறந்த உடன் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். கர்நாடகாவில், காங்கிரஸ் அரசு மேகதாது அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும். தமிழக அரசு அதற்கு கர்நாடக அரசுடன் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.