சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் ஒரே நிலைப்பாடு; இதில் இரட்டை வேடம் எதுவும் இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். திமுக போராட்டம் நடத்துவதால் அதிமுக மாநாட்டிற்கு கூட்டம் வராது என இபிஎஸ் பயப்படுகிறாரா? என கேள்வி எழுப்பிய ரகுபதி, அதிமுக மாநாட்டிற்கு மக்களும் போக மாட்டார்கள் என்பதால் அர்த்தமற்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.