சென்னை: நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்தது திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும், ஆளுநரின் இந்த போக்கை கண்டித்துதான் தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம் நடத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.