டெல்லி: நாடாளுமன்றத்தில் அத்துமீறியதாக கைதான நீலம் பெற்றோர், எஃப்.ஐ.ஆர். நகலை வழங்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நீலம் உள்ளிட்டோரின் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர். நகலை வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீலத்தை சந்திக்க அனுமதி அளிக்கும்படி டெல்லி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவரது பெற்றோர் கோரிக்கை வைத்தனர். வழக்கில் டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு; விசாரணை டிச.18-க்கு ஒத்திவைத்துள்ளனர்.