செங்கல்பட்டு: நாவலூர் அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்மார் வேதகிரி நகரில் கை, கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் ஐடி ஊழியரான பெண் மீட்கப்பட்டார். உயிருக்கு போராடிய பெண் மருத்துவமனையில் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கொலை செய்தது தொடர்பாக வெற்றி என்பவரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.