மும்பை: தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி இறுதிநேர வர்த்தகத்தின்போது 20,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. வர்த்தக நேர முடிவில் 176 புள்ளிகள் உயர்வுடன் 19,996.35 என்ற புதிய உச்சத்தில் நிஃப்டி நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 46 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 528 புள்ளிகள் அதிகரித்து 67,127 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.