புதுடெல்லி: பா.ஜவின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் அந்தோணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி . இவர் சமீபத்தில் காங்கிரசில் உள்ள அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து பாஜவில் இணைந்தார். தற்போது பா.ஜவின் தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் அந்தோணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பா.ஜவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டுள்ளார்.