மதுரை: தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்து இருந்தால் அதை தீவிரமாக கருதி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பராமரிப்புகளை அதற்கான அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய திட்ட இயக்குனருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விருதுநகரை சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.