*திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஸ்ரீகாளஹஸ்தி : நாகலாபுரம் அருகே பள்ளிகொண்டேஸ்வரர் கோயிலில் நடந்த பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த நாகலாபுரம் மண்டலம், சுருட்டபள்ளியில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
அதன்படி, கோயில் வளாகத்தில் உள்ள நந்தீஸ்வரர் மற்றும் வால்மீகீஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், சுவாமிக்கும் நந்தீஸ்வரருக்கும் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பிரதோஷநாதர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சுருட்டபள்ளி உட்பட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.