நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம், கீழ்வேளூர் தாலுக்காவை சேர்ந்த மீனவர்கள் 6வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இழுவை மடி வலையை தடை செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 4,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் நிறுத்திவைப்பால் 50ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.