ஷியோபூர்: குனோ தேசிய பூங்காவில் இருந்து மாயமான ஆண் சிவிங்கி புலி உபி அருகே மீட்கப்பட்டது. கடந்த ஆண்டு நமீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு மபி மாநிலம், குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து, 12 சிவிங்கி புலிகள் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. குனோ பூங்காவில் ஒபன் என்ற ஆண் சிவிங்கி புலி கடந்த வாரம் தப்பியோடியது. காலரில் கட்டப்பட்டுள்ள கண்காணிப்பு சாதனம் மூலம் அதை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உபி மாநிலம் ஜான்சி வன பகுதிக்குள் நுழைய முயன்ற சிவிங்கி புலியை வனத்துறையினர் நேற்று முன்தினம் மீட்டனர்.
ம.பியில் மாயமான சிவிங்கி புலி உபியில் மீட்பு
previous post