சென்னை : கொலை வழக்குகளில் சரணடைவோர் வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு முறையிட்டுள்ளது. கொலை வழக்கில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலேயே சரணடைய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்துள்ளார். திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை வழக்கில் 5 பேர் சத்தியமங்கலம் கோர்ட்டில் சரணடைந்ததை சுட்டிக்காட்டி முறையீடு செய்யப்பட்டது.