மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பெரியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக 5 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணி மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தீ விபத்தில் தற்போது வரை உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்து கெமிக்கல் நிறுவனத்தில் ஏற்பட்டிருப்பதால் காரணமாக தீயை அணைக்கும் பணி மிகவும் சவாலான ஒன்றாக இருக்கும் என தீயணைப்பு வீரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.