ஜோத்பூர்: முகலாய பேரரசர் அக்பர் ஒரு கொடுங்கோலன், பலாத்கார குற்றவாளி என்று ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் கல்வி அமைச்சர் மதன் திலாவர் நேற்று கூறுகையில்,’ முகலாய பேரரசர் அக்பர் சிறந்தவர் அல்ல. ஆனால் கொடுங்கோலன். மேலும் பலாத்காரம் செய்பவர். பஜாரில் இருந்து பெண்களை அழைத்து வந்து அக்பர் பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். ராஜஸ்தான் பள்ளிகளில் சூர்ய நமஸ்காரம் படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் சூர்ய நமஸ்காரம் கட்டாயமாகி விடும்’ என்றார்.