சென்னை : எம்.எல்.ஏ., எம்.பி.களுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 561 வழக்குகள் உள்ளன என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நிலையில், குற்றச்சாட்டு பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
“எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு எதிராக 561 வழக்குகள்” : தமிழக அரசு தகவல்
previous post