சென்னை: மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சென்னை மையத்துக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் ஷீலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிரு ப்பதாவது: 3 ஆண்டுகள் முடித்த மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றை கேட்டிருந்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் மாணவிகள் அதனை ஏற்காமல் வகுப்புகளை புறக்கணிப்பு செய்வதால், மறு உத்தரவு வரும் வரை காலவரையற்ற விடுமுறை சென்னை மையத்துக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
previous post