காரைக்குடி: காரைக்குடியில் சொத்துக்காக வாலிபரை கொலை செய்த தாய், சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாச்சுலியேந்தலை சேர்ந்த அழகேசன் மகன் அலெக்ஸ்பாண்டியன்(30). இவரை கடந்த மார்ச் 30ம் தேதி மர்ம கும்பல் படுகொலை செய்தது. இதுதொடர்பாக தனிப்படையினர் பலரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். இதில், சொத்துக்காக அவரது தாய் இந்திரா(55), சகோதரிகள் தமிழரசி(34), கலையரசி(32) ஆகியோர் சேர்ந்து, மதுரையை சேர்ந்த கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இவர்களை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையை சேர்ந்த கூலிப்படையை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சொத்துக்காக வாலிபரை, தாய், சகோதரிகள், கூலிப்படையை ஏவி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடியில் சொத்துக்காக கூலிப்படையை ஏவி வாலிபரை கொன்ற தாய், சகோதரிகள் கைது
previous post