மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் அப்பாவி மக்கள் மீது நடத்திய கொடூர தாக்குலை இந்திய தேசிய காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ரஷ்ய கூட்டமைப்புக்கும் காங்கிரஸ் தோளோடு தோளாக துணை நிற்கும். தீவிரவாதம் மனித குலத்திற்கும், அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 60 பேர் உயிரிழந்தனர்.