புதுடெல்லி: பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதற்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து, கரும்பில் இருந்து எத்தனால் தயாரிப்பதை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்கான மூலப்பொருளான மொலாசஸ் ஏற்றுமதியை கட்டுப்படுத்த 50 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதாகவும் இது 18ம் தேதி அமலுக்கு வருவதாகவும் ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் எத்தனால் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.