திருச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி வண்ணாங்கோவிலில் வரும் 24ம் தேதி அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு, 39 தொகுதிகளுக்குமான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார். இக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.
கோவையில் நடந்த பிரதமர் ‘ேராடு ஷோ’ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது குறித்து விசாரித்து தேர்தல் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா குறித்து தற்போது மோடி மேடைகள் தோறும் தொடர்ந்து புகழ்ந்து பேசி வருகிறார். ஆனால் அண்ணாமலை பலமுறை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா போன்ேறாரை அவதூறாகவும், இகழ்ந்தும் பேசும் கண்டிக்கவில்லை இவ்வாறு அவர் கூறினார்.