சென்னை: ஹிட்லரின் கோயபல்சையும் மிஞ்சும் மோடி அரசின் பொய் பிரச்சாரங்கள் உள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். கோயபல்ஸ் பாணியில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஜகவின் பொய் தொழிற்சாலைகள் உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மோடி அரசின் நவீன பிரச்சார ஆயுதங்கள் போலிச் செய்திகள் தயாரிப்பு தொழிற்சாலையாக உள்ளது. போலிச் செய்தி தயாரிப்பு ஆலையில் பல ஆயிரம் பேரை பணியில் அமர்த்தி இணையத்தில் திட்டமிட்டு பொய் பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.