திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று (27ம் தேதி) நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். இதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதியில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அழைத்து செல்ல ஒவ்வொரு பூத்துக்கும் வசூல் செய்ய ரூ.500 அச்சடிக்கப்பட்ட 10 சிலிப் கொண்ட நன்கொடை புக் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூத்துக்கும் ரூ.5 ஆயிரம் வசூல் செய்யப்படுகிறது. இந்த பணத்தின் மூலம் ஆட்களை அழைத்து வரவும், வாகனங்களில் அழைத்து செல்லவும் செலவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாடாளுமன்ற தொகுதியில் சுமார் 9 ஆயிரம் பூத்கள் இருக்கும். இதன் மூலம் ரூ.50 லட்சம் வரை வசூல் செய்ய திட்டமிட்டு வசூல் நடைபெற்று வருகிறது. அந்த ரசீதில், ‘பாரதிய ஜனதா கட்சி-தமிழ்நாடு’ என்று குறிப்பிட்டு, பாஜ தலைமை அலுவலகமான கமலாலயம் முகவரி அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் அண்ணாமலைக்கு தெரியவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.