புதுடெல்லி: “பாஜவின் கோட்டைகளிலும் பிரதமர் மோடி ஏன் பயப்படுகிறார்?” என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. குஜராத்தின் சூரத், மத்தியபிரதேசத்தின் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற்றது குறித்து எதிர்க்கட்சியினரும், அரசியல் விமர்சகர்களும் பல்வேறு கண்டனங்களையும், கருத்துகளையும் முன் வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில்,
“கடந்த 1984ம் ஆண்டு முதல் சூரத், இந்தூர் தொகுதிகளில் காங்கிரஸ் இதுவரை வெற்றி பெற்றதில்லை. ஆனால் 2024 தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு வேட்பு மனுவை திரும்ப பெற வைக்கப்பட்டுள்ளனர். பாரம்பரியமாக பாஜவின் கோட்டைகளாக இருக்கும் இடங்களில் கூட மோடி ஏன் பதற்றமாக இருக்கிறார்? பயப்படுகிறார்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.