சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஜன.12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. 3வது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.