Friday, May 10, 2024
Home » அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதி..!!

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை: சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு.. தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதி..!!

by Kalaivani Saravanan

சென்னை: அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டின் அனைத்து அறைகள், கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கார்களில் உள்ள ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்வது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடியின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திற்கு வருவோர் தீவிர கண்காணிப்புக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக 5 முதல் 7 காவலர்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது 15 முதல் 20 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi