ஈரோடு : ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து மொடக்குறிச்சி ஒத்தக்கடை பகுதியில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் கேஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ. 500-க்கு தரப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.,”இவ்வாறு தெரிவித்தார்.