சென்னை சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் பேட்டி அளித்த அவர், “1-5ம் வகுப்பு வரை மாணவர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை 30%-40% அதிகரித்துள்ளது.காலை உணவு திட்டத்தில் நானும் ஒரு பயனாளி தான். தொடர்ந்து உணவு தரம் பற்றி ஆய்வு செய்யப்படும்., “என்றார்.