டெல்லி: அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்க்கு கெஜ்ரிவால், சரத்பவார் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசுக்கு எதிரான குரலை நசுக்க தென் மாநிலங்களுக்கு அமலாக்கத்துறையை மோடி அரசு அனுப்பி உள்ளது என சரத்பவார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை துன்புறுத்தவும், மிரட்டவும் ஒன்றிய விசாரணை அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்துகிறது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.