டெல்லி: அமைச்சர் உதயநிதிக்கு மிரட்டல் விடுத்த சாமியாரை கைது செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.கார்த்திசிதம்பரம் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் அமைச்சரை ஒரு சாமியார் மிரட்டுவதை நாடும், காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது. இந்தியாவை பாரதம் என மாற்றினால் பல்வேறு அசவுகரியம் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.