சென்னை: சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் அனைத்து மக்களிடமும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் நிறைவேற்றி உதயநிதி செயலாற்றி வந்தார். இந்தநிலையில் தான், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் மக்களின் தேவைகளையும் அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்று உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மற்றும் கருத்துகளை தெரிவிக்க அதற்கென தனி டிவிட்டர் கணக்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்.
அதன்படி, புதிதாக தொடங்கப்பட்டுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை தெரியப்படுத்துங்கள் அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தப்படும். இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.