சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன்கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி அல்லி விளக்கமளித்துள்ளார். ஜாமீன் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்ட நிலையில் நீதிபதி அல்லி தகவல் தெரிவித்தார்.