சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை ஏப்ரல் 30 வரை நீதிபதி அல்லி நீட்டித்தார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம் வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.