மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பெருமழையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான வேளச்சேரி அம்பேத்கர் நகர், மடிப்பாக்கம் பாலாஜி நகர், பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக 12000 பிரேட் பேக்கெட்டுகள், 11600 பால் பவுடர் பேக்கெட்டுகள், 5600 அரிசி மூட்டைகள், 70000 பிஸ்கட் பேக்கெட்டுகள், 14100 குடிநீர் பாட்டில்கள், 5200 மெழுகுவர்த்திகள், 6000 தீப்பெட்டிகள், 1000 போர்வைகள், 17000 இனிப்பு பன்களை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வழங்கினார்.