சென்னை: மிக்ஜாம் புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும், முகாமில் உள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.