நாமக்கல் : எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவின் தொண்டர்கள் பாஜகவுக்கு வர வேண்டும் என்று மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் மாநில பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கும் முன், எம்ஜிஆர் மன்றங்கள் ஏற்றியது தாமரை கொடியைத்தான். தாமரைச் சின்னம் எம்.ஜி.ஆர். கொடுத்த சின்னம்,”இவ்வாறு தெரிவித்தார்.