சேலம்: மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா திடீர் ஆய்வு நடத்தி வருகிறார். அணையின் வலது கரை, இடது கரை, மேல்மட்ட மதகுகள், கீழ்மட்ட மதகுகள் பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். அணையின் உறுதித் தன்மை, மதகுகளின் உறுதித் தன்மை குறித்தும் சந்திப் சக்சேனா கேட்டறிந்தார். ஆய்வின் போது ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.