சென்னை: மெட்ரோ ரயில் 2028ம் ஆண்டின் உத்தேச பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் பணிகள் மேற்கொண்டுள்ளனர். கூடுதலாக தேவைப்படும் பெட்டிகளை கணக்கிட்டு ரூ.2,820.90 கோடியில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளனர். பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்று கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கருத்துவிற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.