சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: சென்னை முழுவதும் செல்போன் நெட்வொர்க் பிரச்னையால் மெட்ரோ ரயில் பயணத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக செயல்படவில்லை.
மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தி பயணம் செய்யலாம். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் பிளாஸ்டிக் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கியது.