ஷில்லாங்: மேகாலயா துணை முதல்வர் ஸ்னியூபாலாங்கின் வீடு கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள் நாங்மைன்சாங் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று துணை முதல்வர் வீட்டின் மீதுமர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வீட்டின் பால்கனியின் மீது வீசப்பட்ட இந்த பெட்ரோல் குண்டு தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. இந்த சம்பவத்தின் போது துணை முதல்வர் வீட்டில் இல்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துணை முதல்வர் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.