சேலம்: சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்த அரசு டாக்டர் செல்வராஜின் மகன் கவுதம் (20), அதே பகுதியை சேர்ந்த ஜெகநாத் (21), பாலசுப்பிரமணியம் மகன் சரண் (23), கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த வெட்டுமணியை சேர்ந்த பிரபாகர்சிங் மகன் காமியோ (21), அதே பகுதியை சேர்ந்த சத்தியபிரபா (21) ஆகியோர் புதுவை பிள்ளையார் குப்பம் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகின்றனர்.
சேலத்தில் உள்ள கவுதம் வீட்டில் நடந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கன்னியாகுமரி நோக்கி காரில் புறப்பட்டனர். சேலம் மாவட்டம் மல்லூர் பொய்மான்கரடு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் பின் பகுதியில் இவர்களது கார் மோதியது. இதில் கவுதம், காமியோ ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெகநாத், சத்தியபிரபா படுகாயமடைந்தனர்.