Friday, May 3, 2024
Home » திருமணமாகி கணவர் விவாகரத்து செய்த பிறகும் பெண்ணுக்கு காதல் டார்ச்சர் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை

திருமணமாகி கணவர் விவாகரத்து செய்த பிறகும் பெண்ணுக்கு காதல் டார்ச்சர் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக்கொலை

by MuthuKumar

திருமலை: திருமணமாகி கணவர் விவாகரத்து செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட பிறகும் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து காதல் டார்ச்சர் கொடுத்த வாலிபர் நடுரோட்டில் சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் இந்தரம் கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா. இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளும், அதே ஊரை சேர்ந்த மகேஷ் (24) என்ற வாலிபரும் காதலித்துள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், தன்னை தொடர்ந்து காதலிக்கும்படி மகேஷ் கூறியுள்ளார்.

இதற்கிடையில் இளம்பெண்ணுக்கு அவரது பெற்ேறார் கடந்த ஆண்டு நஸ்பூர் கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். அதற்கு பிறகும் மகேஷ், இளம்பெண்ணை டார்ச்சர் செய்துள்ளார். மேலும் திருமணத்திற்கு முன்பு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்கள் வைரலானதால் மனமுடைந்த இளம்பெண்ணின் கணவர், 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால் மகேசுக்கும் கனகய்யா குடும்பத்தினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. மகேஷ், தொடர்ந்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததால் ஜெய்ப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இருவரையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் மகேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று மகேஷ், பைக்கில் இளம்பெண்ணின் வீட்டு முன்பு சென்றுள்ளார். அப்போது இளம்பெண்ணின் குடும்பத்தினர், அவரை தடுத்து நிறுத்தி கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். மேலும் அங்கிருந்த கல்லை தூக்கி தலையில் போட்டுள்ளனர்.

இதில் மகேஷ் அதே இடத்தில் இறந்தார். பின்னர் கொலையாளிகள் போலீசில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூரக்காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

nineteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi